லக்னோ: தெரு நாய்க்கு பயந்து அருகேயுள்ள வீட்டில் நுழைந்த இளைஞரை திருடன் என நினைத்து வீட்டின் உரிமையாளர் தீவைத்து எரித்து கொன்றார். உத்தரப் பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் சுஜித் குமார்(28). இவர் தேவா பகுதியின் ராகோபூர் கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு கடந்த 19ம் தேதி சென்றார். அதிகாலை 2 மணிக்கு சென்ற அவரை அங்கிருந்த தெருநாய்கள் குரைத்தபடி விரட்டி சென்றன. தப்பிக்க வழி தெரியாத சுஜித் குமார் அருகேயிருந்த ஒரு வீட்டுக்குள் நுழைந்தார். நாய் குரைக்கும் சத்தம் கேட்டு எழுந்து வந்த வீட்டின் உரிமையாளர் அங்கு இளைஞர் ஒருவர் பதுங்கியிருப்பதை கண்டு திருடன் என்று கருதினார்.