பல்லாவரம்: போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் பகுதியில் உள்ள சொகுசு பங்களாவில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தில் முக்கிய குற்றவாளியை போலீசார் நேற்று கைது செய்தனர். கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சூர்யகாந்த் (38), இவரது மனைவி சுனிதா (35), சாப்ட்வேர் இன்ஜினியர்களான இவர்கள் இருவரும் போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் பகுதியில் உள்ள சொகுசு பங்களா பங்களாவில் வசித்து வந்தனர். கடந்த வாரம் சுனிதாவின் தம்பி தீபக் கேரளாவில் இருந்து தனது அக்காவை பார்க்க காரில் வந்தார். அங்கிருந்த காவலாளி சுனிதாவின் உத்தரவுப்படி, தீபக்கை உள்ளே விட மறுத்ததால் ஆத்திரமடைந்த தீபக், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, வானத்தை நோக்கி 2 முறை சுட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.