கொழும்பு: இலங்கையில் தீவிரவாதத்தை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று அந்நாட்டு பிரதமர் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார். இலங்கையில் மாத்தறை நகரில் நடைபெற்ற 97வது சர்வதேச கூட்டுறவு தின நிகழ்ச்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கலந்துக் கொண்டார். அப்போது பேசியதாவது: ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு நிகழ்ந்து 3 மாதங்கள் கடந்த நிலையிலும் மக்கள் இன்னமும் அச்சத்தில் உறைந்துள்ளனர். ஈஸ்டர் தின குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களை பிடிப்பதால் மட்டும் இவ்வகை தீவிரவாதம் முடிவுக்கு வராது. விடுதலைப் புலிகளின் தீவிரவாதத்தை போன்று ஐஎஸ் தாக்குதலை எதிர்கொள்ள முடியாது. இதற்கான புதிய யுத்தி குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அதற்காக புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.