சிவகாசி: தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை கொண்டு வந்தால், மத்திய அரசை தொடர்ந்து எதிர்ப்போம் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நேற்றுமுன்தினம் இரவு நடந்த காமராஜர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது: சசிகலாவை சிறையிலிருந்து சட்டரீதியாக டிடிவி.தினகரன் வெளியில் கொண்டு வந்தால் மகிழ்ச்சிதான். அவர் சிறையில் இருந்து வெளிவந்தாலும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் இருக்காது. தேசிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா மட்டுமல்ல. யார் சொன்னாலும், அதை முதல்வர் ஏற்றுக்கொள்வார்.