கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எடியூரப்பா கோரிக்கை

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் இன்று இரவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார். இரவு 12 மணி என்றாலும் தாங்கள் காத்திருப்பதாக எடியூரப்பா கூறியதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி பாஜக உறுப்பினர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் முழக்கமிட்டனர்.

Related Stories: