சென்னை: ஜூலை 5,12, 19, 26ம் தேதிகளில் சென்னை எழும்பூர் - நெல்லை இடையே மாலை 6.50 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூலை 7, 14, 21, 28ம் தேதிகளில் நெல்லை- சென்னை எழும்பூர் இடையே மாலை 3 மணிக்கு கூடுதல் நெரிசலையொட்டி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நெல்லை- சென்னை ரயில் மாம்பழம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது.