சென்னை: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உயரழுத்த மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு தடை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. உயரழுத்த மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வை.பழனிசாமி உள்ளிட்ட 8 விவசாயிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர். கோபுரம் அமைப்பதால் அதில் இருந்து வெளியாகும் மின்காந்த அலைகளால் மனிதரின் உயிருக்கு ஆபத்து என மனுவில் கூறப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து வழக்கைத் தள்ளுபடி செய்தார்.