சென்னை: கலைஞர் நினைவு நாளில் சென்னையில் முரசொலி அலுவலகத்தில் ஆகஸ்ட் 7-ம் தேதி கலைஞர் சிலையை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலைஞர் சிலை திறப்பு விழாவில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரளா முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்க உள்ளனர். தனது தலைமையில் நடைபெறும் கலைஞர் சிலை திறப்பு விழா தொடர்பாக ஸ்டாலின் தம்மை சந்தித்து பேசியதாக கி.வீரமணி தெரிவித்துள்ளார்.