வீட்டில் தீவிபத்து

வேளச்சேரி: அடையாறு காந்தி நகர் 3வது மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் நவீன் குமார் (35). சுயதொழில் செய்து வருகிறார். இவர், நேற்று காலை வீட்டில் டி.வி பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஏசியில் தீப்பிடித்து வெடித்துள்ளது.  இதனால் பயந்து போன அவர், மனைவியுடன் வெளியே ஓடி வந்தார். தகவலறிந்து திருவான்மியூர், தேனாம்பேட்டை, கிண்டி ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 வாகனங்களில் வந்த வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை  அணைத்தனர். அதற்குள் வீட்டில் இருந்த ஏசி, டிவி, கட்டில் மற்றும் அனைத்து பொருட்களும் நாசமானது. இதுகுறித்து சாஸ்திரிநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: