மலைக்கோட்டை மாநகரின் சிப்காட் பகுதி உள்ள காவல்நிலையத்திற்கு தேர்தல் அறிவிப்பிற்கு முன்னதாக புதிதாக புறநகர் பகுதியில் இருந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் பொறுப்பேற்றார். இதில், கடந்த வாரம் அதிகாலை மைக்கில் பேசிய அந்த சரக உதவி கமிஷனர் அனைவரும் எனது செல்போனில் உடனே பேச வேண்டும் என உத்தரவிட்டார். இரவு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட அந்த பகுதிக்குட்பட்ட காவல் நிலைய போலீசார் அனைவரும் வெலவெலத்து போனார்கள். அடித்துபிடித்து உதவி கமிஷனரின் செல்போனில் பேசிய போலீசார் இதற்கு தான் இந்த பில்டப்பா என எகிறினர். விசாரித்த போது, உதவி கமிஷனர் புறநகர் பகுதியில் இருந்த போது மணல் மூலம் அதிகளவில் மாமூல் வந்தது. அதுபோல் மாநகருக்குள் அவரது எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு இவரது அனுமதியுடன் மணல் லாரிகளில் கடத்தப்பட்டு வந்தது.