தேர்தல் முடிவுகள் எதிரொலி அமமுகவில் இருந்து மாஜி எம்எல்ஏ விலகல்: அதிமுகவில் இணைந்தார்

நெல்லை: அமமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ ஆர்.பி.ஆதித்தன் விலகி சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.மக்களவை தேர்தலில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக 37 தொகுதிகளில் போட்டியிட்டது. மத்திய சென்னை தொகுதியை கூட்டணி கட்சியான எஸ்டிபிஐக்கு ஒதுக்கியது. இந்த தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும்  அமமுக படு தோல்வியடைந்தது. இதேபோல் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் படுதோல்வியை சந்தித்தது.

தேர்தலில் அமமுக சறுக்கியதால், அமமுக அமைப்பு செயலாளரும், சேரன்மகாதேவி முன்னாள் எம்எல்ஏவுமான ஆர்.பி.ஆதித்தன், அமமுகவில் இருந்து விலகி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி,  ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் முன்னிலையில் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று அதிமுகவில் இணைந்தார். பின்னர் ஆர்பி ஆதித்தன் கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் மேலும் பல அமமுக நிர்வாகிகள் விரைவில் அதிமுகவில் இணைவார்கள், என்றார்.

Related Stories: