கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி நடக்கிறது சென்னையில் திமுக நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம்

* மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்

* கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்பு

சென்னை: கலைஞரின் பிறந்த நாளான வருகிற 3ம் தேதி வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு மாபெரும் பொதுக்கூட்டம் சென்னையில் நடக்கிறது. இதில் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர்.கலைஞரின் 96வது பிறந்தநாள் விழா ஜூன் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பிறந்த நாள் விழா மற்றும் தமிழக வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு மாபெரும் பொதுக்கூட்டம் திமுக சார்பில் வருகிற 3ம் தேதி நடக்கிறது. சென்னை  நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு திமுக பொது செயலாளர் அன்பழகன் தலைமை வகிக்கிறார். பொருளாளர் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார்.சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ வரவேற்புரை ஆற்றுகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுக்கிறார்.

பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொது செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்  இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா,  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் சுப.வீரபாண்டியன், பொன்.குமார், தர் வாண்டையார், எஸ்றா.சற்குணம், இனிகோ இருதயராஜ், முருகவேல்ராஜன், பி.வி.கதிரவன், அதியமான், கு.செல்லமுத்து, எர்ணாவூர்  நாராயணன், திருப்பூர் அல்தாப், பஷீர் அகமது, பி.என்.அம்மாவாசி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

Related Stories: