சென்னை: பாமக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் அதன் தலைவராகவும், பிரதமராகவும் மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், பிரதமர் மோடியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாடினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி பெற்ற இமாலய வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். அதற்கு மோடி, டெல்லிக்கு எப்போது வருகிறீர்கள் என்று கேட்டார். விரைவில் வருவதாக ராமதாஸ் பதில் அளித்து பேசினார்.