தேர்தலில் படுதோல்வி அடைந்த நிலையில் ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்: டிடிவி.தினகரன் தலைமையில் நடைபெறுகிறது

சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற 38 நாடாளுமன்ற மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அமமுக படுதோல்வி அடைந்தது. தேர்தலுக்கு முன்பு அமமுகவின் துணைப்பொதுசெயலாளராக இருந்த டிடிவி.தினகரன் திடீரென  அக்கட்சியின் பொதுச்செயலாளராக தன்னை அறிவித்துக்கொண்டார். நாடாளுமன்ற தேர்தல் கைகொடுக்காவிட்டாலும் சட்டமன்ற இடைத்தேர்தலில் 15 சீட்டுகளையாவது பெற்றுவிட வேண்டும் என்று நிைனத்திருந்தார்.

ஆனால், இவற்றிற்கெல்லாம் மாறாக அனைத்திலும் அமமுக வேட்பாளர்கள் படுதோல்வியை சந்தித்தனர். இந்நிலையில் அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  ஜூன் 1ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி அளவில் சென்னை, அசோக் நகர் நடேசன் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அமமுக நிர்வாகிகள்,  மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளர்கள் அனைவரும் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related Stories: