சென்னை: நாடு முழுமையும் அமைதி நிலவுகின்ற வகையில் ஆட்சி சக்கரத்தை சுழற்ற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:நாடாளுமன்ற தேர்தலில் பெரு வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்கின்ற நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.பாரதிய ஜனதா கட்சி வெற்றிச் செய்திகள் மட்டுமே நாடெங்கும் அலை பாய்ந்து கொண்டு இருக்கின்ற வேளையில், வேறு சில செய்திகள் கவலையையும், அதிர்ச்சியையும் தருகின்றன.