மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் காளைச்சந்தை பஸ் நிலையம் அருகே கருங்கல் செல்லும் சாலையின் வலது பக்கத்தில் கழிவுநீர் ஓடை உள்ளது.
ஆனால் இந்த ஓடை சரியாக பராமரிக்கப்படாததால் கழிவுநீர் சரியாக பாய்ந்து செல்ல முடியாமல் தேங்கி நின்றது. மேலும் ஓடை பல இடங்களில் உடைந்தும் காணப்பட்டது. இதனால் இப்பகுதியில் வரும் கழிவுநீர் ஓடையில் பாய்ந்து செல்ல முடியாமல் சாலையில் பெருகி சென்றது. மேலும் இந்த இந்த கழிநீர் கசிந்து அருகில் உள்ள வீட்டிலும் பாய்ந்து சுகாதார சீர்கேட்டை உருவாக்கி வந்தது. இப்பகுதியில் பாய்ந்து செல்லும் கழிவுநீரால் பொதுமக்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகி வந்தனர்.