காஷ்மீர்: காஷ்மீரின் சில பகுதிகளில் 2-வது நாளாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்த அன்சர் கஸ்வத் உல்-ஹிந்த் என்ற பயங்கரவாத இயக்கத்தின் தளபதியான ஜகிர் முசாவை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். மூசா கொல்லப்பட்டதையடுத்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பலர் தானாக முன்வந்து கடைகளை அடைத்தனர்.