காஷ்மீரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2-வது நாளாக ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு

காஷ்மீர்: காஷ்மீரின் சில பகுதிகளில் 2-வது நாளாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்த அன்சர் கஸ்வத் உல்-ஹிந்த் என்ற பயங்கரவாத இயக்கத்தின் தளபதியான ஜகிர் முசாவை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். மூசா கொல்லப்பட்டதையடுத்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பலர் தானாக முன்வந்து கடைகளை அடைத்தனர்.

இதனால், அசம்பாவித சம்பங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர், குல்காம், புல்வாமா ஆகிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில், 2-வது நாளாக இந்த இடங்களில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories: