சென்னை: மக்கள் நலன் காக்கும் திமுகவின் முற்போக்கு வெற்றி பயணம் தொடரும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இனி வரும் காலம் மாநிலங்களை மையப்படுத்தும் ஆக்கப்பூர்வ அரசியலுக்கான காலமாக இருக்கும் எனவும் தெரிவித்தார். பக்குவப்படுத்தப்பட்ட தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற அணுகுமுறைக்கு மக்கள் மத்தியில் சீரிய இடம் உருவாக்கப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்தார். வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தமிழ்நாட்டு மக்கள் திமுக கூட்டணிக்கு மனமுவந்து வழங்கியுள்ளனர் என கூறினார். மக்களின் நம்பிக்கைகுரிய இயக்கம் திமுக தான் என்பதை ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெற வைத்து வாக்காளர்கள் நிருபித்துள்ளனர். தேர்தல் ஆணையத்தின் ஒருதலைபட்சமான நடவடிக்கைகளை மக்கள் எதிர்கொண்டு மக்களை மட்டுமே நம்பி திமுக கூட்டணியின் பயணம் தொடர்ந்தது என கூறினார்.