வாக்கு மையத்தில் ரகளை தர்மபுரியில் பாமகவினர் 2 பேர் கைது

தர்மபுரி: தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள், செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. மாலை 7 மணியளவில் அன்புமணி பின்னடைவு குறித்த தகவல் அறிந்து, வாக்கு எண்ணிக்கை மையத்தின் முன் பாமகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால், அவர்களில் 2 பேர் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து, பாமகவினர் 2 பேரையும் கைது செய்து, தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். நேற்று காலை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories: