ஐதரபாத்: ஆந்திர மாநில பிரிவினைக்கு பிறகு இரண்டாவது முதல்வராக பதவியேற்க உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் போனில் வாழ்த்து தெரிவித்தார். ஆந்திராவில் 142 சட்டமன்றத் தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். இதற்கிடையே, மே 30-ம் தேதி ஆந்திரா முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்கிறார்.