ஒடிசா: ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றி நவீன் பட்நாயக் மீண்டும் முதல்வர் ஆகிறார். நாடு முழுவதும் மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில், பாஜக 331 இடங்களிலும், காங்கிரஸ் 97 இடங்களிலும், மற்றவை 115 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. இதன் காரணமாக மத்தியில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறார். இதையடுத்து, ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தலிலும் பெரும்பான்மை தொகுதிகளை பெற்று நவீன் பட்நாயக் 5வது முறையாக முதல்வர் ஆகிறார். 147 தொகுதிகளை கொண்ட ஒடிசா சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நான்கு கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில், பிஜு ஜனதா தளம், காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகியவை தனித்தே போட்டியிட்டன. இதில் காங்கிரஸ் 139 தொகுதிகளில் போட்டியிட்டது. பகுஜன் சமாஜ் வாடி (107 இடங்கள்), ஆம் ஆத்மி (15) தொகுதிகளில் போட்டியிட்டது. முன்னதாக, ஒடிசாவில் அசைக்க முடியாத சக்தியாக நவீன்பட்நாயக் மீண்டும் ஆட்சியை தக்க வைப்பார் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்தன.