சென்னை: கூடுவாஞ்சேரி, மண்ணிவாக்கத்தில் கள்ளக்காதலை கைவிடாத தாயை ஆத்திரம் அடைந்த மகன் சரமாரியாக கத்தியால் குத்தி கொன்றான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.வண்டலூர் மண்ணிவாக்கம், கக்கன் தெருவை சேர்ந்தவர் அன்பு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துவிட்டார். இவரது மனைவி பவானி (40). இவருக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.படப்பை அடுத்த சோமங்கலத்தில், பவானி கட்டிட வேலை செய்தபோது மேஸ்திரி ராஜ்குமார் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த மூத்த மகன் சம்பத் (22) தாயின் கள்ளத்தொடர்பை பலமுறை கண்டித்து வந்துள்ளார். எனவே பவானி வீட்டுக்கு வராமல் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மண்ணிவாக்கத்தில் பவானி கள்ளக்காதலனுடன் பைக்கில் செல்வதை கண்டதும் சம்பத் அதிர்ச்சி அடைந்து, பைக்கில் பின்தொடர்ந்து சென்றுள்ளார். இதைப் பார்த்து கள்ளக்காதலன் பவானியுடன் பைக்கில் வேகமாக சென்று உள்ளார்.