மும்பை: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றது. 12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகிற 30 ம் தேதி தொடங்கி ஜூலை 14 ம் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, நியூசிலாந்து, வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதிச்சுற்றில் வென்று உலகக்கோப்பையில் விளையாட தகுதி பெற்றன.