திருப்பூர்: அமெரிக்கா-சீனா வர்த்தக கொள்கையில் ஏற்பட்ட முரண்பாடுகளால், சீன பொருட்கள் வங்கதேசம் வழியாக இந்தியாவிற்குள் வருவதால் இந்திய பின்னலாடை உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது: சீன பொருட்களுக்கு அமெரிக்கா வரியை உயர்த்தியுள்ளதால், அமெரிக்க இறக்குமதியாளர்களின் கவனம் இந்தியா பக்கம் திரும்பியுள்ளது. இதனால், இந்திய பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சீனாவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 10 சதவீதம் குறைந்து, அதில் 20 சதவீத இந்தியா பெற்றாலே ஏறத்தாழ ரூ.50 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி வாய்ப்பு உருவாகும். கடந்த சில ஆண்டுகளாக இந்திய ஜவுளி ஏற்றுமதியில் பெரிய வளர்ச்சி இல்லை.