டெல்லி: உலகக்கோப்பையை வென்று இந்திய ராணுவத்துக்கு அர்ப்பணிக்கப் போவதாக விராட் கோலி சூளுரைத்துள்ளார்.உலகக்கோப்பைத் தொடரில் விளையாடும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி புதன்கிழமை இங்கிலாந்து புறப்பட்டுச் செல்கிறது. இதுதொடர்பாக மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் கோலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மைதானம் மற்றும் சூழல்களைக் காட்டிலும், போட்டியின் போது உண்டாகும் அழுத்தத்தை கையாள்வதே முக்கியமானது எனத் தெரிவித்தார். பந்துவீச்சில் குல்தீப் யாதவும், யுஸ்வேந்திர சாஹலும் இரு தூண்களாக இருப்பார்கள் என்று கூறிய விராட் கோலி, இந்த உலகக்கோப்பையை, ராணுவ வீரர்களுக்காக கட்டாயம் வெல்லப் போவதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.