ரோம்: இத்தாலி சர்வதேச டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் விளையாட, செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை ஜோகன்னா கோன்ட்டாவுடன் நேற்று மோதிய பிளிஸ்கோவா 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் கோன்ட்டா கடும் நெருக்கடி கொடுத்தாலும், அவரது சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த பிளிஸ்கோவா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி, 25 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. களிமண் தரை மைதானங்களில் விளையாடிய தொடர்களில் பிளிஸ்கோவா பெற்ற பெரிய வெற்றி இது தான். அவர் வென்ற சாம்பியன் பட்டங்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.