எழுத்தாளர் எஸ்.முத்தையா மரணம்

சென்னை: தமிழக எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளரும், வரலாற்று ஆய்வாளருமான எஸ்.முத்தையா உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 89. சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூரை சேர்ந்தவர் எஸ். முத்தையா. இவர் 1930ம் ஆண்டில் பிறந்தார். கட்டிட பொறியியல் மற்றும் அரசியல் அறிவியல் படித்துள்ளார். 1951ல் பல்வேறு நாளிதழ்களில் முக்கிய ெபாறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

சென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாச்சார வரலாறு, சென்னையின் இன்றைய நிலையை தொகுத்து புத்தகமாக வெளியிட்டார். சென்னையின் மறுகண்டுபிடிப்பு உள்பட 10க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். மெட்ராஸ்  மியூசிங்ஸ் என்ற பெயரில் பத்திரிகை ஒன்றையும் அவர் நடத்தி வந்தார். சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.  அவரின் மறைவுக்கு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: