சென்னை: 2019 மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு சிறப்பு துணை பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்களிடம் இருந்து சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் (தட்கல்) ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்புவோர் அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு துறை சேவை மையங்களுக்கு ஏப்ரல் 23, 24ம் தேதிகளில் நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தனியார் கணினி சேவை மையங்கள் (பிரவுசிங் சென்டர்கள்) மூலம் விண்ணப்பிக்க முடியாது. கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.