விடுமுறையை கொண்டாட வசதியாக 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் : எம்டிசி அறிவிப்பு

சென்னை: விடுமுறை காரணமாக சுற்றுலாத்தலங்கள், திருத்தலங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக எம்டிசி அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: பொதுமக்களின் வசதிக்காக இன்று முதல் ஜூன் 30ம் தேதி வரை அனைத்து சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் சிறப்பு பஸ்கள் நகரின் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாத்தலங்கள் மற்றும் திருத்தலங்களுக்கு இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, அண்ணாசதுக்கம் வழியாக 50, கோவளம்-3, வண்டலூர் உயிரியல் பூங்கா - 21, மாமல்லபுரம் -7, பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் -8, திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோயில் -8, சிறுவாபுரி முருகன் கோயில் -3 என மொத்தமாக 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: