சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினும் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முக ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக பாரிவேந்தர் சந்தித்து பேசினார். பெரம்பலூர் மக்களவை தொகுதியில் தமக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததற்க்காக பாரிவேந்தர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.