சென்னை: இடைத்தேர்தல் நடைபெற உள்ள சூலூர் மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தேர்தல் பணிகள் தொடர்பான இந்த ஆலோசனை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. இந்த ஆலோசனையில் துரைமுருகன், ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.