சென்னை: சென்னை எம்ஜிஆர் நகர் சூளை பள்ளத்தை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (54). கூலித்தொழிலாளியான இவர், அதே பகுதியில் உள்ள ஏலச்சீட்டு மற்றும் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் திரிலோகசுந்தரி (45) என்பவரிடம் கடந்த ஆண்டு வட்டிக்கு ரூ.60 ஆயிரம் வாங்கினார். சரியாக வேலை இல்லாததால் பணத்தை திருப்பி தர முடியாமல் கோவிந்தம்மாள் தவித்து வந்துள்ளார். பணம் கொடுத்த திரிலோக சுந்தரி அடிக்கடி வீட்டிற்கு வந்து பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். இதற்கிடையே, கோவிந்தம்மாள் திரிலோக சுந்தரிக்கு தெரியாமல் வீட்டை காலி செய்துவிட்டு, வடபழனி குமரன் காலனியில் குடியேறியுள்ளார். பணம் கொடுத்த திரிலோக சுந்தரியை கடந்த ஒரு வாரமாக பல இடங்களில் தேடி கடைசியாக கோவிந்தம்மாள் வசித்த வீட்டை கண்டுபிடித்து அப்பகுதி மக்கள் முன்னிலையில் கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது.