அதிமுக., வேட்பாளராக திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த தியாகராஜன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்ட அதிமுக.,வினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். நீலகிரி தனி தொகுதியில், திமுக சார்பில் மூன்றாவது முறையாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசா போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் அவிநாசி பகுதியை சேர்ந்த தியாகராஜன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இவர் பொள்ளாச்சி தொகுதி முன்னாள் எம்பி.. மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்த நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக.,வினர் இந்த அறிவிப்பு வந்தவுடனே அப்செட் ஆகிவிட்டனர். காரணம், நீலகிரி மாவட்டத்தில் இருந்து மொத்தம் 23 பேர் விருப்பமனு செய்திருந்தனர். இதில், குறிப்பிடும் வகையில் உள்ளவர்கள் குன்னூர் நகராட்சி தலைவராக இருந்த சரவணகுமார், பாஜ.,வில் இருந்து விலகி வந்த குருமூர்த்தி, தற்போது எம்பி.,யாக உள்ள கோபாலகிருஷ்ணன் ஆகியோர். மேலும், ஜெகதளா ஊராட்சி தலைவர் உஷா என்ற பெண்ணின் பெயரும் அடிப்பட்டது.