மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ராஜ்தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா (எம்.என்.எஸ்.) அறிவித்துள்ளது. தேர்தலில் தேசியவாத காங்கிரசுக்கு ஆதரவு அளிக்க அக்கட்சி முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி நான்கு கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று எம்.என்.எஸ். கட்சி அறிவித்துள்ளது. தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு என்பதை அதிகாரப்பூர்வமாக எம்.என்.எஸ். இதுவரை அறிவிக்கவில்லை.