குரூப் 2ஏ பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு 25ல் தொடக்கம்

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 2ஏ (நேர்முக தேர்வு அல்லாத பதவி) 2017-18ல் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு எழுத்து தேர்வு கடந்த 6.8.2017 அன்று நடந்த எழுத்துத்  தேர்வில் விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண் விவரங்கள் 7.3.2018 அன்று வெளியிடப்பட்டது. இத்தெரிவு தொடர்பான மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு (இரண்டாம் கட்டம்) சென்னை பிராட்வே பேருந்து நிலையம் அருகில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் வருகிற 25ம் தேதி நடைபெற உள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு  மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர் மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீட்டு விதி மற்றும் மீதமுள்ள காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு  மற்றும் கலந்தாய்விற்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய “அழைப்பு கடிதத்தினை” தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வர தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: