சென்னை : அரசு ஊழியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். குழந்தை, வயதான பெற்றோர் என கூறி பணி மாறுதலை எதிர்ப்போர் அரசுப் பணியை தேர்வு செய்ய கூடாது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கோவையில் இருந்து வேலூருக்கு மாற்றியதை எதிர்த்து அரசு மருத்துவமனை செவிலியர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.