பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். போலீசில் பிடியில் உள்ள திருநாவுக்கரசு வாக்குமூலம் அடிப்படையில் மேலும் ஒருவர் சிக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்து இதுவரை புதிதாக புகார் ஏதும் வரவில்லை என்று சிபிசிஐடி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சபரிராஜன், சதீஷ் ஆகியோரின் அந்தரங்க வீடியோக்கள் தான் அதிகம் சிக்கியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.