இங்கு நடப்பது மக்கள் ஆட்சியா? மன்னர் ஆட்சியா? என நீதிபதிகள் கேள்வி

மதுரை: தேர்தல் வாக்குறுதியை தனிபிரமான பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட விவகாரம் குறித்து பெரும்பாலான கட்சிகள் வாரிசு அரசியலையே ஊக்குவிக்கின்றன என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். பாஜக, கம்யூனிஸ்ட் தவிர பிற அரசியல் கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிக்கின்றன என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாவை 500 குடும்பங்கள் தான் ஆட்சி செய்கிறது எனவும், இங்கு நடப்பது மக்கள் ஆட்சியா அல்லது மன்னர் ஆட்சியா என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: