மதுரை: தூத்துக்குடி தனியார் ரசாயன தொழிற்சாலை பயன்பாட்டிற்காக தாமிரபரணி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கப்படுகிறதா என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ஆற்றில் தண்ணீர் எடுப்பதாக தொடர்ந்த வழக்கில் ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு வழங்கியது.