கொள்ளிடம் ஆற்றுக்கு நடுவே திடீரென ஹெலிகாப்டர் தரையிறங்கியதால் மக்கள் பதற்றம்

அரியலூர் : அரியலூர் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கு நடுவே திடீரென ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கியதால் மக்கள் பதற்றம் அடைந்தனர். அரியலூர், தஞ்சை எல்லையில் உள்ள கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் அதிக சத்தத் தோடு ஹெலிகாப்டர் ஒன்று தரை இறங்கியது. அதில் இருந்து வந்த அதிகாரிகள் சிலர் கொள்ளிடம் ஆற்றுப் பகுதியை ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.

மணல் குவாரி அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கும் திட்டத்தை ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் ஹெலிகாப்டரில் வந்திருக்கலாம் என மக்கள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக தகவல் அளித்திருக்கும் அரியலூர் வட்டாட்சியர் தஞ்சாவூரில் உள்ள விமானப்படையை சேர்ந்த அதிகாரிகள் பயிற்சி எடுப்பதற்காக வந்திருக்கலாம் என கூறியுள்ளார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: