திருப்பதியில் திருடப்பட்ட 3 மாத குழந்தை மீட்பு

திருமலை: திருப்பதியில், விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த நரிக்குறவர் காலனியை சேர்ந்த  மாவீரா, அவரது மனைவி கவுசல்யாகோயில் அருகே  வியாபாரம் செய்து வந்தனர். இவர்களது 6 மாத ஆண் குழந்தை வீராவுடன், கடந்த 16ம் தேதி இரவு வணிக வளாகத்தில் தூங்கி உள்ளனர். இரவில் குழந்தையை யாரோ  திருடி விட்டனர். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் குழந்தையை திருடிய பெண்ணை, திருப்பதி அடுத்த மங்கலம் பகுதியில் கைது செய்து  குழந்தையை மீட்டனர். அவர், சித்தூர் மாவட்டம், கார்வேட்டை நகரத்தை சேர்ந்த துளசி என்பதும் திருமலையில் ஒப்பந்த துப்புரவு ஊழியர். விவாகரத்தான துளசிக்கு,  குழந்தை இல்லாத நிலையில் வீராவை திருடி வளர்க்க முயன்றதும் தெரியவந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: