தென்தாமரைக்குளம்: கன்னியாகுமரி அருகே கடனுக்காக 4 வயது சிறுவனை, தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்றவரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி அருகே ஆரோக்கியபுரம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய கெபின்ராஜ் (35). மீன் பிடி தொழிலாளி. இவரது மனைவி சகாய சிந்துஜா என்ற சரண்யா. இவர்களது மகன் ரெய்னா (4). ஆரோக்கிய கெபின்ராஜ், குடும்ப செலவுக்காக தனது தாய் மாமன் அந்தோணிசாமியிடம் (36) ₹1 லட்சம் கடன் வாங்கி உள்ளார். இதில் திரும்ப கொடுத்ததுபோக ெகாஞ்சம் பாக்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பணத்தை கேட்டு அந்ேதாணிசாமி அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். கடந்த இரு நாட்களுக்கு முன்னரும் தகராறு நடந்துள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ஆரோக்கிய கெபின்ராஜின் மகன் ரெய்னாவை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அப்போது அந்தோணி சாமி திடீரென சகாய சிந்துஜாவுக்கு போன் செய்து, உனது மகனை நான் பைக்கில் கடத்தி வந்து விட்டேன். எனது பாதுகாப்பில் தான் ரெய்னா இருக்கிறான். நீ பணத்தை தந்தால்தான் அழைத்து வருவேன் என கூறி உள்ளார்.