மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களின் பட்டியல் நாளை மறுநாள் வெளியீடு; கமல்ஹாசன் அறிவிப்பு

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் பட்டியல் நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை நாளை மறுநாள் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவிக்க உள்ளார். தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை மறுநாள் அக்கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இன்று காலை 9 மணிக்கு கமல்ஹாசன் தலைமையில் தேர்தல் பணிக்குழு கூட்டம் ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட உள்ளது. நாளை மறுநாள் 20-ந்தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி ஓராண்டு காலம் ஆன நிலையில் முதலாவதாக சந்திக்கும் தேர்தல் இதுவாகும். இதில் கமல்ஹாசன் போட்டியிடுவேன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில அவர் ராமநாதபுரம், திருப்பூர், தென் சென்னை, ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: