ஆடு இறந்ததால் மாமியாருடன் தகராறு மருமகள் தூக்கிட்டு தற்கொலை

ஆவடி: ஆவடி அருகே, வீட்டில் வளர்த்து வந்த ஆடு இறந்ததால் மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் மருமகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆவடி அடுத்த கொள்ளுமேடு, ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் தனசேகர், கால் டாக்சி டிரைவர். இவரது மனைவி சங்கீதா (24). தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் வளர்த்து வந்த  ஆட்டுக் குட்டி ஒன்று முள்வேலியில் சிக்கி இறந்துவிட்டது. இதனை சரிவர பார்த்து கொள்ள முடியாதா என சங்கீதாவுடன், அமிர்தம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதில், மனம் உடைந்த சங்கீதா நேற்று மதியம்  வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ஆவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் சங்கீதாவிற்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது  திருவள்ளூர்  ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார்.

*  தண்டையார்பேட்டை வஉசி நகர் இசட் பிளாக்கை சேர்ந்தவர் பிரேம்குமார் (29). நேற்று முன்தினம் இரவு வீட்டு வாசலில் பைக்கை நிறுத்தி இருந்தார். நள்ளிரவில் அவரது பைக் தீப்பிடித்து எரிந்தது.

அதேபோல் பக்கத்து வீட்டில் வசிக்கும் குமார் (49) என்பவரின் மொபட்டும் தீப்பிடித்து எரிந்தது. புகார்களின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* திநகர், கிரியப்பா ரோடு பகுதியை சேர்ந்தவர் அன்சர் பாட்ஷா (37). கடந்த 2018ம் ஆண்டு தி.நகர், ஜிஎன்டி சாலையில் நடந்து சென்றபோது 2 பேர் அவரது செல்ேபானை பறித்து சென்றனர். புகாரின்பேரில் பாண்டிபஜார்  போலீசார் வழக்குப்பதிவு செய்து மடிப்பாக்கம், மூவரசம்பேட்டை, ஏரிக்கரை தெருவை சேர்ந்த ஹசன் அலி (27) என்பவரை நேற்று கைது செய்தனர்.

* குன்றத்தூர் மகாலிங்கம் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர் (35). தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு தனது பைக்கை வீட்டின் உள்ளே நிறுத்துவதற்காக ஸ்ரீதர் ஸ்டார்ட் செய்தார். அப்போது திடீரென தீப்பிடித்து பைக்  முற்றிலும் எரிந்து நாசமானது.

* கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் இந்திரா (28). துபாயில் வேலை பார்த்து வரும் இவர் விடுமுறையில் சென்னை வந்துள்ளார். நேற்று தனது பிறந்த நாளை முன்னிட்டு  நண்பர்களுடன் அண்ணாநகர் 2வது அவென்யூவில் தாபா  கடையில் உணவு ஆர்டர் கொடுத்துள்ளார். அப்போது அவரது நண்பர்கள் அஸ்வின் பிரசாத் (24), சம்பத் (25) ஆகியோருக்கு இடையே ஏற்பட்டு தாக்கிக்கொண்டனர். புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து  இருவரையும் கைது செய்தனர்.

*  தரமணி, தாமிரபரணி தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம்  (60). இவரது மனைவி சரஸ்வதி. தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில வருடங்களாக  ராஜமாணிக்கம்  தனியாக வசித்து வந்தார். மனைவி  சரஸ்வதி கொட்டிவாக்கத்தில் வசித்து வருகிறார். நேற்று வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது ராஜமாணிக்கம் இறந்து கிடந்தது  தெரிந்தது. இதுகுறித்து தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: