மொஸாம்பிக் நாட்டில் சூறாவளிக்கு 19 பேர் உயிரிழப்பு

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொஸாம்பிக்கில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை மற்றும் சூறாவளியால் இங்குள்ள பெய்ரா நகரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

பெய்ரா நகரில் ஒரே நாளில் மட்டும் 19 பேர் சூறாவளிக்கு உயிரிழந்துள்ளனர். மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேரிடர் மேலாண்மை குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மொஸாம்பிக் நாட்டில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வரும் நிலையில் ஏற்கனவே 66 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: