கிறிஸ்ட்சர்ச் : நியூசிலாந்து நாட்டில் 2 மசூதிகளில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் உயிரிழந்தக ஆதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட கொலையாளி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலையாளி ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த 28 வயதான பிரெண்டன் டாரண்ட் என தெரிய வந்துள்ளது. இதை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரீசன் உறுதி செய்தார். இந்த தாக்குதலை ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.