இரணியல் அருகே பரபரப்பு: வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து குடிநீர் தொட்டியில் விஷம் கலப்பு

திங்கள்சந்தை: இரணியல் அருகே மூலச்சன்விளை பகுதியை சேர்ந்தவர் பேபி (68). இவர் அந்த பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்து  வருவதாக  தெரிகிறது. இது தொடர்பாக இரணியல் போலீசில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 14ம் தேதி பேபி மது விற்று வருவதாக அந்த பகுதியினர்  காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இரணியல்  போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து பேபி வீட்டில் சோதனை  நடத்தினர். அப்போது 17 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் பேபியையும்  அதிரடியாக கைது செய்தனர். அதன்பிறகு ஜாமீனில் வெளிவந்த  பேபி, தான் மது விற்பது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தவர் யாரென விசாரித்தார்.

இதில் அதே பகுதியை சேர்ந்த சுபிலா  என்பவர் போலீசாருக்கு தகவல் கூறியது தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பேபி, நேற்று மாலை சுபிலா  வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அத்துமீறி உள்ளே நுழைந்து வீட்டில்  இருந்த செயர் உள்பட பொருட்களை அடித்து நொறுக்கி உள்ளார். மேலும் தகாத  வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்ததோடு, வீட்டு குடிநீர்  தொட்டியில் விஷப் பொடியை கலந்துள்ளார். இதுகுறித்து சுபிலா இரணியல் போலீசில்  புகார்  செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான பேபியை தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: