திங்கள்சந்தை: இரணியல் அருகே மூலச்சன்விளை பகுதியை சேர்ந்தவர் பேபி (68). இவர் அந்த பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்து வருவதாக தெரிகிறது. இது தொடர்பாக இரணியல் போலீசில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 14ம் தேதி பேபி மது விற்று வருவதாக அந்த பகுதியினர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இரணியல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து பேபி வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது 17 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் பேபியையும் அதிரடியாக கைது செய்தனர். அதன்பிறகு ஜாமீனில் வெளிவந்த பேபி, தான் மது விற்பது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தவர் யாரென விசாரித்தார்.