அரியலூர்: புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர் சிவச்சந்திரன் குடும்பத்தினருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆறுதல் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் கார்குடிகிராமத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீர மரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரர் சிவச்சந்திரன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து வைகோ ஆறுதல் தெரிவித்தார்.