மும்பை: புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் வழங்கப்படும் என இந்தி நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் சிஆர்பிஎப் வீரர்கள் 2,500 பேர், 78 வாகனங்களில் கடந்த 14-ம் தேதி அவர்களின் முகாம்களுக்கு சென்று கொண்டிருந்தனர். புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் வீரர்களின் வாகனம் சென்று கொண்டிருந்தபோது, ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி அதில் அகமது என்பவன், 100 கிலோ வெடிமருந்துகள் ஏற்றப்பட்ட வாகனத்தில் வந்து, வீரர்கள் சென்ற பஸ் மீது மோதினான். இந்த கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் மரணம் அடைந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதம் சோகத்தை ஏற்படுத்தியது.