புதுச்சேரி: மக்கள் நலத்திட்டங்களுக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டை போடுகிறார் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்த பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். முக்கியமான 39 கோப்புகளில் கிரண்பேடி கையெழுத்திடமால் வைத்துள்ளார். மேலும் மோடிக்கும் ஜனநாயகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.